இலங்கையை அடிமைப்படுத்தும் இந்தியாவின் எண்ணம்! அநுரவின் செயற்பாட்டை விமர்சிக்கும் விமல்

 எட்கா உடன்படிக்கை மூலம் இந்தியா எதிர்வரும் காலங்களில் இலங்கையை அடிமைப்படுத்திவிடும் என்று விமல் வீரவன்ச(Wimal Weerawansa) எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் (18) மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் சொற்கேட்டு ஆடும் கைப்பாவை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) இந்திய விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான எட்கா உடன்படிக்கை தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

லிபரல் ஜனநாயகவாதியான ரணில் விக்ரமசிங்க அவ்வாறான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அது குறித்து ஆச்சரியப்பட நேர்ந்திருக்காது.



ஆனால் இந்திய வல்லாதிக்கம் குறித்து ஏராளமாக எச்சரித்துள்ள ரோஹண விஜேவீர உருவாக்கிய கட்சியின் தலைவர்களில் ஒருவர் அவ்வாறு செய்வது அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகின்றது.

குறித்த உடன்படிக்கை மூலம் அரசியல், கலாசாரம், எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியாவின் சொற்கேட்டு ஆடும் கைப்பாவையாக இலங்கையை மாற்றிக் கொள்வதே இந்தியாவின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.