கண்டி வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலத்தை காணவில்லை.

 இலங்கையின் 2 வது பெரிய தேசிய வைத்தியசாலையான, கண்டி வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலத்தை காணவில்லை.



58 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, வைத்தியசாலை செயல்பாடுகளை பராமரிப்பதில் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. 80 வார்டுகள், 11 தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் பிற சிகிச்சை பிரிவுகளைக் கொண்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் நாளாந்தம் சிகிச்சைப் பெறும் இந்த வைத்தியசாலையை மேம்படுத்த, இந்த ஆக்கிரமிப்புகள் தடையாக உள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் செல்லும் வீதியில் கடைகள், மலர்சாலைகளாலும், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்ட ஒரு நோயாளியை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதிலும் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.