T-20 உலகக் கிண்ணத்திற்கான பரிசுத்தொகை அறிவிப்பு: வரலாற்றில் அதிக்கூடிய பரிசுத்தொகை.


 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.


இதன்படி 20/20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


20 அணிகள் பங்கேற்கும் டி 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கிண்ணத்துடன், உலக கிண்ண வரலாற்றிலேயே அதிக்கூடிய பரிசுத்தொகையைப் பெற்றுக் கொள்ளும்.


மேலும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு எதிர்பார்க்கப்படும் தொகையான 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை, அரையிறுதிச் சுற்றில் தோல்வியடையும் அணிகளுக்கு 787,500 அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இந்த ஆண்டு முழுப் போட்டியிலும் அணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை 11.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.