கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
போலி மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை இன்று(16) கையளிக்கப்பட்டது.
நீண்ட விளக்கத்தின் பின்னர் பிரதிவாதிகள் 12 பேரையும் தலா 05 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளின் கீழ் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மற்றும் ட்ரிபொப்சிமெப் என அடையாளப்படுத்தி மருந்து அல்லாத வேறு திரவங்கள் அடங்கிய 6,195 குப்பிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் 1,444 இலட்சம் ரூபாவை மோசடியான முறையில் கையாள்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை, குறித்த நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
Post a Comment