வெற்றியாளர்கள் கௌரவிப்பு

 மன்னார் வலய பாடசாலைகளில் குறிப்பிடும் படியான பாடசாலைகளில் ஒன்றான, மன்/ எருக்கலம்பிட்டி  மகளிர் மகா வித்தியாலயத்தின் வெற்றியாளர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று  18.09.2025 நடை பெற்றது .


இதிலே அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றோர், மற்றும் கா பொ  த (சாதாரண தர) பரிட்சையில் 7A சித்திகளுக்கு மேல் பெற்றோர் ,மற்றும் உயர்தரத்தில் கூடிய சித்திகள் பெற்று, பல்கலைக்கழகத்திற்கு தெரிவானோர் ஆகியோருக்கான மதிப்பளிப்பும் ,அவர்களது பெற்றோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று மிக சிறப்பாகவும், விமர்சையாகவும் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.


 இந்த நிகழ்வுக்கு பிரதான அனுசரணையாளர்களில் ஒருவராக இந்த பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் தற்போது பிரான்ஸ் தேசத்தில் வசிப்பவருமான மன்னார் கற்கிடந்த  குளத்தைச் சேர்ந்த திரு. ரோக்சன் சைலேந்திரா அவர்கள் வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .


சிறப்பான இந்த நிகழ்வை நடாத்திய இப்பாடசாலையின் அதிபர் ,ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் "RBC மீடியா" வாழ்த்தி பாராட்டுகிறோம்









No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.