தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எம்மீது பழி சுமத்துகிறது – நாமல்
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது.
இந்த தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச நிர்வாகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் அனைத்தையும் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துவதை ஆட்சியாளர்கள் பிரதான கொள்கையாக கொண்டுள்ளார்கள்.
ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது ஆகவே இன்றும் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.




Post a Comment