ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அநுர

 ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2025 செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.



இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க ஜப்பானின் மாட்சிமைமிகு பேரரசரை சந்தித்துப் பேசவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வம்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜப்பானிய பிரதமருடன் உச்சிமாநாட்டுச் சந்திப்பொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், முக்கிய ஜப்பானிய வணிகங்கள் மற்றும் டோக்கியோவில் உள்ள முதலீட்டாளர்களின் உயர் மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வணிக மன்றத்தில் ஜனாதிபதி திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.

“எக்ஸ்போ 2025” இல், இலங்கைத் தினத்தின் வைபவத்திற்கான ஜப்பான் அரசாங்கத்தின் விருந்தினராக, “எக்ஸ்போ 2025 ஒசாகா” நிகழ்விலும் ஜனாதிபதி திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வு சர்வதேச பார்வையாளர்களுக்கு இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பொருளாதார இயலுமையை முன்னிலைப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.