சலுகை விலையில் வழங்கப்படவிருந்த வீடுகளுக்கான சலுகை விலை ரத்து..!


இலங்கையில் ஏற்பட்ட “அரகலய” புரட்சியின் போது எரியூட்டப்பட்ட எம்.பி க்களின் வீடுகளுக்கு பதிலாக அப்போதைய அரசு “வியத்புர” வீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான வீடுகளை சலுகை விலையில் வழங்க முடிவெடுத்திருந்தது.



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகளை சலுகை விலையில் வழங்க எடுத்த தீர்மானித்தினால் அரசுக்கு 90 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக அரசாங்க ஊடக பேச்சாளர் நலிந்த ஜெயதிச்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை சலுகை விலையில் கொடுப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த முடிவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்வதாகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் பொதுமக்களுக்கு விற்கப்படும் அதே விலையில் - சலுகைகள் இல்லாமல் குறித்த வீடுகளை விலைக்கு வாங்க முடியும் எனவும் அரசு முடிவெடுத்துள்ளது.
வீடுகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வீட்டின் விலையில் 25% பணத்தை செலுத்திய முன்னாள் எம்பிக்களின் பெயர் பட்டியலும் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் முன்னாள் MP க்களான முஷாரப் முதுநபின், அலி சப்ரி ரஹீம் மற்றும் முசம்மில் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முத்துநாபீனின் வீடு “அரகலய” கலவரத்தின் போது எரியுட்டப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.