“பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” – மஹிந்த !
பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது எனக்கு கிடைத்த அதிஸ்டம் என்றே கருதுகிறேன்.நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாது. சர்வதேச தலையீடுகளுக்கு அடிபணியாமல் அரச தலைவர்கள் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.அவற்றை அநாவசியமான முறையில் போராடி பெற்றுக்கொள்ள கூடாது. அவ்வாறு செயற்பட்டால் அரசாங்கமும் அநாவசியமான முறையில் முடக்குவதற்கு தயாராகும்.ஆகவே தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக வழிமுறையில் செயற்பட வேண்டும்.அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.ஆகவே அரசாங்கம் செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியார் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
Post a Comment