ஐஸ் போதைப்பொருள் எடுத்து சென்ற மன்னாரைச் சேர்ந்த 21 வயது இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

 ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது.


2022 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் எடுத்து சென்ற போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் இளைஞருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் குறித்த இளைஞன் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இளைஞன் 21 வயதான மன்னாரைச் சேர்ந்தவர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.