புத்தளம் கல்வி வலயத்தின் சிறந்த மாணவர்களை ACMC கௌரவித்தது.

 ASSAD INSPIRE AWARDS - புத்தளம் கல்வி வலயத்தின் சிறந்த மாணவர்களை ACMC கௌரவித்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், புத்தளம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (15) புத்தளம் மாநகரசபை மண்டபத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான MTM. தாஹீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக புத்தளம் மாநகர மேயர் ரின்ஸாட், உப மேயர் நுஸ்கி , புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் ராதிக சஞ்சீவ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நபவி, புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான அஸ்கா, நௌசாட், ஜவாட் உள்ளிட்டோருடன் புத்தளம், கற்பிட்டி, சிலாபம் உள்ளிட்ட சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.