ASSAD INSPIRE AWARDS – குருணாகல் மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC
ASSAD INSPIRE AWARDS – குருணாகல் மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், குருணாகல் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை மண்டபத்தில், கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர், ஓய்வுபெற்ற அதிபர் M.T.M முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக குளியாப்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் விஜயசிறி ஏக்கநாயக்க, குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அசாருடீன் மொய்னுடீன், குளியாப்பிட்டிய பிரதேச சபையின் உபதவிசாளர் இர்பான், கிரிஉல்ல கல்வி வலய தமிழ்மொழி மூல பணிப்பாளர் பாயிஸ், மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் ஹய்தர் அலி, கெகுணுகொல்ல தேசிய பாடசாலையின் அதிபர் ரிஸாட், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் குருணாகல் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்




Post a Comment