மன்னார் நகரசபை உப தவிசாளர் நூர் முகம்மது உசன் அவர்களின் தலைமையில் சிரமதான பணிகள்
சிரமதான பணிகள் முன்னிட்டு, மன்னார் நகர சபைக்குட்பட்ட உப்புக்குளம் கோந்தை பிட்டி ,ஜன்னத்நகர் ஆகிய பகுதியில் இன்று (09) சிரமதான பணிகள் இடம்பெற்றன.
இதன் போது வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன், டெங்கு பரவும் வகையில் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் துப்புரவு செய்யப்பட்டன.
இவ் சிரமதான பணி மன்னார் நகரசபை உப தவிசாளர் நூர் முகம்மது உசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உப்புக்குளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு, தெற்கு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணியினர் , ஊர் மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.









Post a Comment