புரட்சியாளர் சே குவேரா நினைவுதினம்: உலகை உலுக்கிய மாமனிதன்!
சே’ நிச்சயம் ஒரு சாகசக்காரன் அல்ல… நிச்சயம் சித்தாந்தமற்ற சாகசக்காரன், மரணத்தைக் கண்டு அஞ்சுவான். ஆனால் ‘சே’, கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவு கொடுத்து பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் பத்தொன்பது வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலை பார்த்துவிட்டு இவ்வாறாக சொல்கிறான், ‘இதுபோன்ற சூழலில் எப்படி குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்திருந்தால் நான் உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்..’ இப்படி நிச்சயம் வெறும் சாகசக்காரனால் பேச முடியாது.
‘சே’ தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறாக எழுதி இருக்கிறார், ”பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்…”
ஆனால், அவர்கள் ‘சே’வின் நம்பிக்கைகள் என்னவென்று மக்கள் தெரிந்துக் கொள்வதை விரும்புவதில்லை. அவர்களுக்கு ‘சே’வும் ஒரு பண்டம். அவ்வளவே.
‘விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் முக்கியமற்றவை…’ என்பார் சே. அவன் நம்பிக்கையையும், சித்தாந்தத்தையும் புரிந்துகொள்ளாமல் வெறும் டி-சர்ட் அணிந்துகொள்வதால் மட்டும் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.
எப்படி அவர்கள் நம்மைவிட ‘சே’வை அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்களோ… அதன் மூலம் ‘சே’வை வீழ்த்த, உள்வாங்க துடிக்கிறார்களோ… நாமும் அதுபோல் அவர்களை அதிகம் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை வெல்ல முடியும்!




Post a Comment