மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் மீண்டும் சிக்கியுள்ள இலங்கையர்கள்!

 மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும்

13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 


சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு இந்த சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷாரா ரோட்ரிக் அத தெரணவிடம் தெரிவித்தார். 


மியான்மரின் மியாவடி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த சைபர் முகாம்கள் பயங்கரவாத குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 




ஏராளமான இலங்கையர்கள் இந்த முகாம்களில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 


தூதரகங்களின் தலையீட்டால், பல சந்தர்ப்பங்களில் அங்கிருந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 


கணினித் துறையில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் சில இலங்கையர்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று பின்னர் இதுபோன்ற கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.