மஹிந்த இன்று வெளியேறுகிறார்
இலங்கையின் முன்னாள் (அதிபர்களுக்கு) ஜனாதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்து சிறப்பு வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்..
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளார் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததாக அதே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ, தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளார்.
இதேவேளை முன்னாள் அதிபர்களில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனாவும் ஏற்கனவே வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment