தென் மாகாணத்தில் GovPay ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி

 தென் மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு GovPay ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி இன்று (15) பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.



மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்ட செயலகங்கள் உட்பட மூன்று மாவட்டங்களில் உள்ள 50 பிரதேச செயலகங்கள் மற்றும் 03 மாவட்ட செயலகங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் இந்த GovPay ஊடாக பணம் செலுத்த முடியும்.

மாத்தறை மாவட்டத்தில், மாவட்ட செயலகம் உட்பட பதினாறு (16) பிரதேச செயலகங்கள், காலி மாவட்டத்தில், மாவட்ட செயலகம் உட்பட இருபத்தி இரண்டு (22) பிரதேச செயலகங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மாவட்ட செயலகம் உட்பட பன்னிரண்டு (12) பிரதேச செயலகங்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.

நாட்டில் முதல் முறையாக, இந்த GovPay முறை ஊடாக கட்டணம் செலுத்தும் முறை, இன்று ஒரே நேரத்தில் 53 அரச நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.