முட்டையை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது – பொலிஸில் முறைப்பாடு

 அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.



அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் முட்டை விலை குறையும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகளும், நுகர்வோரும் முட்டையை வாங்குவதை தவிர்த்து வருவதாகக் குறித்த சங்கங்கள் கூறியுள்ளன.

இருப்பினும், தற்போதைய உற்பத்தி செலவுகளைக் கருத்தில் கொண்டு, ரூ.18க்கு ஒரு முட்டையை விற்க முடியாது என்று அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிசம்பர் வரை தட்டுப்பாடு இல்லாமல் முட்டைகளை விற்பனை செய்ய வாய்ப்பிருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. அலஹகூன் கூறினார்.

அண்மையில் வெளியாகிய தகவல்களைக் கருத்தில் கொண்டு, முட்டை உற்பத்தியாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டால், அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.