ASSAD INSPIRE AWARDS - மன்னார் மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC
ASSAD INSPIRE AWARDS - மன்னார் மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17) மன்னார் நகர சபையின் கலாச்சார மண்டபத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை உறுப்பினரும் முன்னாள் வடமாகாண இளைஞர் சேவை அதிகாரியுமான முனவ்வர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கட்சியின் பிரதித்தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், மன்னார் வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞானராஜ், மன்னார் நகர சபையின் தவிசாளர் வசந்தன், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஜப்ரான், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பிரேம்குமார், மன்னார் நகர சபையின் உதவித் தவிசாளர் உசைன், முசலி பிரதேச சபையின் உதவித் தவிசாளர் தன்சீம், நானாட்டன் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஞானராஜ் சூசை, மன்னார் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் சாந்தினி குரூஸ், மாந்தை மேற்கு பிரதேச சபையின் உதவித் தவிசாளர் நிசாத், கட்சியின் முன்னாள் உள்ளூராட்சிமன்றத் தவிசாளர்கள், கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








Post a Comment