ASSAD INSPIRE AWARDS - வவுனியா மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC

 ASSAD INSPIRE AWARDS - வவுனியா மாவட்ட மாணவர்களை கௌரவித்தது ACMC



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (18) வவுனியா நகர சபை மண்டபத்தில், கட்சியின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்




காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம், வவுனியா மாநகர சபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன், செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர் தாஜுதீன் முஹம்மட் இம்தியாஸ், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலகிருஷ்ணன் பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் திருநாவட்கரசு கிருஷ்ணவேணி, வவுனியா மாநகர சபை பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன், செட்டிகுளம் பிரதேசசபை பிரதித் தவிசாளர் தேவசகாயம் சிவாநந்தராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரதித் தவிசாளர் பாலசுப்ரமணியம் கோனேஸ்வரி, முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால மற்றும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.