சிறுவர் தினத்தை முன்னிட்டு ரிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி
"சிறுவர்களை மேதையர்களாக முன்னேற்ற முனைப்புடன் செயற்படுவோம்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
"சிறுவர்கள்தான் எதிர்காலத்தின் விடிவெள்ளிகள். நம்மிடமுள்ள விலையில்லாச் சொத்துக்களும் இவர்களேதான். இவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் பொறுப்பு பெற்றோர்களாகிய நமது விருப்பமாக இருக்க வேண்டும்.
சிறுவர்களின் இலட்சியங்களை எமது எண்ணங்களோடு இணைத்து வழிகாட்டுவதே வெற்றிக்கு வித்திடும். அடக்குமுறைக்குள் தவிக்கும் அப்பாவிச் சிறுவர்களை மீட்டெடுப்பதற்கான சிந்தனைகளில், பெற்றோர்கள் ஒன்றுபடுவதற்கு இத்தினமே பொருத்தமானது.




Post a Comment