ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவுகள் பகிர்ந்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
துனிசியாவில், ஜனாதிபதி கைஸ் சயீத்தை அவமதிக்கும் வகையில் முகநூல் பதிவுகள் வெளியிட்டதாகக் கூறி, 51 வயதான சபேர் சவுசென் என்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த தீர்ப்பு, மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.சபேர் சவுசென் மீது, அரசைக் கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2022-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சர்ச்சைக்குரிய இணையக் குற்றச் சட்டமான “டிக்ரி 54” இன் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம், “பொய்யான செய்திகளை” வெளியிடுவது அல்லது பொது அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பரப்புவதை குற்றமாக்குகிறது.




Post a Comment