கச்சதீவுக்கு விஜயம் செய்த முதலாவது இலங்கை ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசனாயக அவர்கள் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவுக்குச் சென்ற முதல் ஜனாதிபதியாக விளங்குகிறார்.
கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய 1974ம் ஆண்டுக்கு பின்னர் வந்த 09 ஜனாதிபதிகளில் எவரும் கச்சதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருக்கவில்லை.
அதற்கான ஆவணங்களோ, செய்திகளோ கடந்தகாலத்தில் இல்லை என்பதே அதன் அர்த்தம். தனிப்பட்ட விஜயங்களாக செய்திருக்கவும் வாய்ப்புகள் அரிதாகவே தெரிகிறது.
1974 - 2025: கச்சதீவு மீட்பு பற்றி இடைவிடாத சூடான விவாதங்கள் இந்தியாவில் இடம்பெற்றே வந்தன.
இப்படியிருக்க,
2025 ஆகஸ்டில் இந்தியாவின் மதுரை மாநாட்டில் விஜய் கச்சதீவை மீட்க முடியுமா? என மோடியை கேட்க, அதிலிருந்து மீண்டும் விடயம் பேசுபொருளாகமாறியிருக்கும் நிலையில்,
தன்தேச எல்லையில் தனது காலடியை - முதலாவது ஜனாதிபதியாக வைத்துள்ளார் அநுர.
இந்தியா பிரதமர் மோடி, எவ்வாறு இந்தியாவின் நான்கு திசை எல்லைகளுக்கும் சென்றாரோ அதே போன்ற அணுகுமுறையாக இதை கவனிக்க வேண்டும்.







Post a Comment