சாளைம்பக்குளம் ஆயிஷா வித்தியாலயத்துக்கு ரிஷாட் பதியுதீனினால் ஒலிபெருக்கி அன்பளிப்பு!

 வவுனியா சாளைம்பக்குளம் ஆரம்பப் பாடசாலையான ஆயிஷா வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட ஒலி பெருக்கி வசதி தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



முன்னாள் அமைச்சரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இந்த ஒலி பெருக்கி வசதியை செய்து கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதாஸ் பகீர்தி தெரிவிக்கையில்,

எமது பாடசாலை மாணவர்களின் தேவை கருதி என்னால் ஒலி பெருக்கி ஒன்றின் தேவை உணரப்பட்டது.

விசேடமாக, காலை நேரத்தில் மாணவர்கள் ஆராதனை செய்வதற்கும் வேறு தேவைகளுக்குமாக இந்த ஒலிபெருக்கி முக்கிய தேவையாக அமைந்தது

இது தொடர்பில் கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையானது சாளம்பைக்குளம் பள்ளிவாசல் தலைவர் ஊடாக முன்னாள் அமைச்சரான ரிஷாத் பதியுதீன் எம்பியின் கவனத்துக்கு செல்லப்பட்டது.

இதனையடுத்து ரிஷாத் பதியுதீனால் கொள்வனவு செய்யப்பட்ட ஒலி பெருக்கி உடனடியாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்காக பாடசாலை சமூகம் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Theme images by Aguru. Powered by Blogger.